Monday, February 20, 2012

எங்கள் சாஸ்தா


கும்பிட்ட கரங்களைக் காத்திட வேண்டும்
குலதெய்வமே எங்கள் கலியுக வரதா
புளியங்குளம் வாழும் புகழான தெய்வமே
எங்களுக்கு புதுவாழ்வு தந்தருள்வாய்
கருணைக்கடலே கண்கண்ட தெய்வமே
கருணாகர மூர்த்தியே எங்களைக் காத்தருள்வாய்
ஆத்திமரத்தடியில் அமர்ந்து ஆட்சி செய்பவரே
எங்களை ஆதரித்து அருள்வாயே
அன்னதான பிரபுவே அன்பருக்கு
அன்பனே அச்சம் எல்லாம் போக்கிடுவாய்
மழை நன்றாய் பெய்ய வேண்டும்
இங்கு மககள் நன்றாய் வாழ வேண்டும்
எங்களுக்கு மனம் இரங்கி அருள்வாயே
கணேசன் தம்பியே எங்கள் கந்தனின் தம்பியே
கற்பூரப் பிரியன் நீயே 
பங்குனி உத்திரத்தில் பக்தியோடு கை தொழுதோம்
பகதர்களை காத்தருள்வாயே உன்னையே நம்பினோம்
உன் பாதம் சரணடைந்தோம்
கலியுக வரதா எங்கள் குலதெய்வமே சரணம் சரணம்
கலியுக வரதா அபயம் அபயம்
கலியுக வரதா கலியுக வரதா 
சரணம் சரணம் சரணம் .



தலைப்பாரம் எடுத்தவர்க்கு
த்னிவழியே நடந்தவர்க்கு
புலிப்பால் கொண்டு வந்தவர்க்கு
எங்கள் புளியங்குளம் அய்யனுக்கு
மங்களம் சுப மங்களம் .

Wednesday, February 1, 2012

இரவு கவிதை

யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் ! என்வே கனவுகளை  நேசிய்ங்கள் !


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால் கண்ணீர் து ளிக்கு மதிப்பு இல்லை !
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கு அவசியமில்லை !


வாழ்க்கை என்பது புத்தகத்தைப் போல ! ஒவ்வொரு பக்கத்தை திருப்பி படிக்கும் பொழுது புதிய புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ளலாம் !

Thursday, January 19, 2012

Friday, November 25, 2011

ஜயவேல்: தனிக் குடித்தனம்

ஜயவேல்: தனிக் குடித்தனம்: பிறந்ததில் இருந்து 61 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்து விட்டு திருமணமாகி 38 ஆண்டுகள்கழித்து இப்பொழுது தனிக்குடித்தனம் 27 / 11 / 2011 அன்று க...

தனிக் குடித்தனம்

பிறந்ததில் இருந்து 61 வருடங்கள் ஒரே வீட்டில் இருந்து விட்டு திருமணமாகி 38 ஆண்டுகள்கழித்து இப்பொழுது தனிக்குடித்தனம்
27 / 11 / 2011 அன்று காலை 3 மணியளவில் கணபதிஹோமம் செய்த பின் பால் காய்ச்சி வேறு வீடு செல்லப் போகின்றோம்

Friday, September 23, 2011

அம்மாவின் மறைவு


FRIDAY 16 SEPTEMBER 2011
தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா!

 
 உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
  பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
   பேணி வளர்த்தாய், பெரியவனானேன்.

உணவு ஊட்டும் உன்னத வேளைதனில்,விலகி ஓடினாலும்
    தந்தை இவர், தனயன் இவர் என்றெனக்கு உலகின்
உறவுகள் தெரிந்திட உணர்வையும் ஊட்டியே வளர்த்தாய்
     உன்னத மனிதனாய் உலகில் வலம் வர ஊக்குவித்தாய்
உறவை மட்டும் சொல்லித்தந்த நீ, பிரிவைச் சொல்லித்தரவோ
    உயிரைத்துறந்து உறவுகளை மறந்து தனியே சென்றாய்!

பாலூட்டிச் சீராட்டி பார்த்துப் பார்த்து வளர்த்த என் தாயே
    படுக்கையில் நீ வீழ்ந்தபோது பரிதவித்துத்தான் போனேன்.
பம்பரமாய்ச் சுழன்று  நீ வேலை பார்த்த வீட்டினிலே
    நிற்பதற்கும் நடப்பதற்கும் பிடிக்க ஒரு கம்பி தேவைப்பட்டதே!
பத்து பேருக்கு நாளும் அன்னமிட்ட உன் கைகளால்
  பசித்திட்ட வேளைதனில் எடுத்துண்ண இயலாமல் போனதேன்?
பாடாய்ப் படுத்திய நோய் உன்னை பச்சிளங்குழந்தையாக்கியதால்,
   பசி,தூக்கம், அன்னம் மறந்தாய், பாலைக் கொடுத்தோம்!

தூக்கம் தொலைத்தாய், துயரம் வளர்த்தோம், கொடுத்த மருந்தினில்
  துவண்ட உன் உடல் கண்டு வெறுத்தே விட்டது  எங்கள் வாழ்வு.
காசிக்குப் போனபோது என் தந்தை உனக்கு அணிவித்த 
  
கண்ணாடி வளையல் கடைசிவரை உன்னுடன் வந்ததே!
காலமெலாம் காப்பாற்றுவாய் என்றெண்ணிய எங்களை மட்டும்
 
கைவிட்டு செல்ல மனம் உனக்கு வந்ததேன்?
தாலாட்டி உறங்க வைத்த  தாயின் மடியே சொர்க்கமென்பேன் எனைச்
  சீராட்டி வளர்த்த உன் கைகள் சிறிதும் செயல்பட மறந்த போதும்
அமுதமொழி அருளிய உன் வாய்தனில் அரிசியிட்ட பொழுதினிலும்,
  அடுக்கி வைத்த சிதையினிலே அனலில் நீ வெந்தபோதும்
தொப்புள்கொடி உறவு  தொடர்பறுந்து தொலைதூரம் இன்று போனபோதும்
சொர்க்கமெல்லாம் சோகமாகி என் வாழ்வின் அர்த்தம் தொலைந்ததம்மா!

டிஸ்கி: 1)04.09.2011 நண்பகல் 12.30 மணியளவில்,எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, இறைவனடி சேர்ந்த என் அன்னைக்கு அர்ப்பணம்.
                2) தகவலறிந்து, நேரிலும், செல்லிலும்,கமெண்டிலும், Google Buz மற்றும் FB யிலும்  இரங்கல் தெரிவித்த பதிவுலக சொந்தங்களுக்கு நன்றி.
                3) இயல்பு நிலை திரும்பியவுடன், பதிவுலகம் பக்கம் வருகிறேன்.

Monday, August 29, 2011

குறுந் தகவல்கள்

ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் தோன்றினால் அது விஸத்தைப்போன்றது , நம்மிடம் உள்ள பல நூறு நல்ல நினைவுகளை இருவரும் சேர்ந்து அனுபவித்ததை மறக்கடித்துவிடும் !

முக்கியமானசெய்தி : - இடது காது அருகில் வைத்து தொலைபேசியோ அல்லது கைபெசியோ உபயோகிக்கவேண்டும் !
மிகவும் குளிர்ந்த நீர் உபயோகித்து மருந்து சாப்பிடாதீர்கள் !
இரவில் மிக அதிகப்படியான உணவு சாப்பிடாதீர்கள் !
காலையில் அதிகம் தண்ணீர் அருந்துங்கள் ! இரவில் குறைவாக தண்ணீர் குடியுங்கள் !
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே !